சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

மஸ்கெலியா, ஓக 19

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் சாமிமலை ஓயா பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை அடுத்த இன்று காலை ஹட்டன் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு குறித்த மூன்று பேரை கைது செய்தனர்.

அவர்கள் அகழ்வு நடவடிக்கைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் கைபற்றி மூன்று பேரையும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் வலய குற்றத்தடுப்பு உயர் அதிகாரி பிரேமலால் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *