
கொழும்பு, ஓக 19
மத்தளை விமானநிலையத்தை தனியார் துறையினருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமால் ஶ்ரீசிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மத்தள விமானநிலையத்தின் ஒரு பகுதியினை இவ்வாறு தனியார் துறையினருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் ஊடாக மத்தளை விமானநிலையத்தை வருமானம் பெறும் நிறுவனமாக செயற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.