உயிருக்குப் போராடிய 6 மீனவர்களை காப்பாற்றிய கடற்படை

மாத்தறை, ஓக 19

மாத்தறை – தேவேந்திரமுனையிலிருந்து சுமார் 18.5 கடல் மைல்  (34 கிலோமீற்றர்) தொலைவில் உள்ள தென் கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகிலிருந்த இலங்கை மீனவர்கள்  6 பேர் இன்று (19) அதிகாலை கடற்படையினர்  உயிருடன் மீட்டுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட படகு, கப்பலொன்றுடன் மோதியதில் விபத்துக்குள்ளானதையடுத்து, கடலில் மூழ்க ஆரம்பித்ததாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து கடந்த 18 ஆம் திகதி இரவு கப்பலின் உரிமையாளர் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் உள்ள கடற்பாதுகாப்பு திணைக்களத்துக்கு தகவல் வழங்கினார்.

அதற்கமைய கடற்பாதுகாப்பு திணைக்களம் ஊடாக கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த கடற்படையினர் கப்பலில் இருந்த அனைத்து மீனவர்களையும் உயிருடன் மீட்டு கரைக்கு அழைத்துவந்ததாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *