பெண்கள் உரிமைகளை தாமாகவே குரல் கொடுக்கும் பெண்கள் குழு உருவாக்கம்!

பெண்கள் உரிமைகளை தாமாகவே குரல் கொடுக்கும் வகையில் வடக்கு மாகாண பெண்கள் குழு உருவாக்கம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் ஆரம்பமாக, பிரதேச செயலக பிரிவுகளில் பெண்கள் குழுக்களை ஆரம்பிக்கும் நோக்குடன், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (வெள்ளிக்கிழமை) பெண்கள் குழு ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச குழுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து அந்த குழுக்களிலிருந்து மாவட்ட குழு உருவாக்கப்பட்டு, பின்னர் மாவட்ட குழுக்களிலிருந்து மாகாண குழு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *