வன்முறை இடம்பெற்றால் தேசியப் பாதுகாப்பு பலவீனமடைந்துவிட்டதாகவே பொருள்- பந்துல

தங்களின் கொள்கையை முன்னிலைப்படுத்தி வன்முறையில் ஒரு தரப்பினர் ஈடுபடுவார்களாயின் அந்நாட்டில் என்றும் தேசிய பாதுகாப்பு பலமானதாக இருக்காது என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வவொன்றில் உரையாற்றிய அவர், தனது அரசியல் காலத்தில் இதுவரை அமைச்சர்களுக்கான வாசஸ்தலத்தில் தான் வாழ்ந்ததில்லை என்றும் வீட்டுக்கான வாடகையைக் கூட அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டதில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனக்கு அரசமைப்பின் 14 (ஊ) சரத்து இல்லாமல் செய்யப்பட்டதாகவும் விரும்பிய நேரத்தல் விரும்பிய இடத்தில் வாழும் உரிமை இலங்கை பிரஜையாகிய தனக்கு இல்லாமல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியைக் கூட இதுவரை பயன்படுத்தியது கிடையாது என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

மேலும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவருக்கு தனது சொந்த வீட்டில் வசிக்க முடியாதுபோனால் அந்த நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மட்டுமன்றி உலக வரலாற்றிலேயே முதன்முறையாக மக்கள் பிரதிநிதியொருவர் மிகவும் கொடூரமான முறையில், வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றும் 12 மணிநேரத்திற்குள் 72 மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமானது உலக நாடாளுமன்ற வரலாற்றிலேயே கரும்புள்ளி என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *