திடீரென இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகர் ஜாக்சன் அந்தனியை சந்திப்பதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அநுராதபுரம், தலாவ ஏழாம் மைல் பகுதியில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதியதில், ஜாக்சன் அந்தனி படுகாயமடைந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *