.சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

ஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை தோட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் சாமிமலை ஓயாவில் சட்ட விரோதமாக நீண்ட காலமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு இருந்த மூன்று பேரை ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவல்களை அடுத்த இன்று காலை ஹட்டன் பொலிசார் சுற்றி வளைத்து மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்கள் அகழ்விற்கு பாவித்த உபகரணங்கள் கைபற்றி மூன்று பேரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக ஹட்டன் வலய குற்றத்தடுப்பு உயர் அதிகாரி பிரேமலால் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *