
சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையம் ஊடாக வெளியில் எடுத்துச் செல்ல முயற்சித்த மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
தங்க ஆபரணங்களை எடுத்து வந்த இந்த இந்திய பிரஜைகள் வெளியேறும் முனையத்தில் தனித்தனியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஆயிரத்து 200 கிராம் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் பெறுமதி சுமார் 18 மில்லியன் என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்