இனப் படுகொலையாளிகளின் தயவில் இயங்கும் மேயர் மணிவண்ணன்-கடுமையாக சாடிய சத்தியசீலன்! (வீடியோ இணைப்பு)

இனப் படுகொலையாளிகளின் தயவில் யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் இயங்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணி அமைப்பாளர் சத்தியசீலன் குற்றம் சாட்டியுள்ளார்.

சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தியாகதீபன் திலீபனின் நினைவேந்தலினை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை செய்வதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கின்றோம். இந்த வருடம் தென் பகுதி தமிழர் தாயகத்தில் இருந்து திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்தியை தமிழர் தேசம் எங்கும் ஊர்திப்பவனியாக எடுத்து வருவதற்கு நாங்கள் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

மட்டக்களப்பு மண்ணினில் அமைந்திருக்கின்ற அன்னை பூபதியின் நினைவு இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தமிழர் தேசம் எங்கும் 12 நாட்கள் மக்கள் அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டு இறுதியாக நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியிலே ஊர்திப்பவனியினை நிறைவு செய்து அந்நாளிலே நினைவு நாளினை முன்னெடுப்பதற்கு நாங்கள் கலந்துரையாடி முன்னாயத்த பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

அதேவேளை தற்போது யாழ்ப்பாணத்தினை ஆட்சி செய்கின்ற முதல்வர் மணிவண்ணன் தலைமையிலான அந்த யாழ்.மாநகரசபையானது இனப்படுகொலையாளிகளின் தயவில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கோட்டாவை கைது செய்ய வேண்டும் என்று மக்கள் கையெடுத்துப்போராட்டத்தினை முன்னெடுக்கப்பட்டால் அந்த கோட்டபாய அரசோடு இனப்படுகொலையினை சரிசமமாக நடாத்திய ஈழ மக்கள் ஜனநாகய கட்சியான டக்ளஸ் தேவானந்தா அமைப்பினரும் போர்க்குற்ற விசாரணைக்கு முகண்கொடுக்க வேண்டும்.

இனப்படுகொலைக்கு இவர்களுக்கும் பங்கு உண்டு. இவர்களையும் கைது செய்ய வேண்டிய நிலை மறைமுகமாக வரலாம்.

இவ்வாறான நிலைமை வருமாக இருந்தால் இன்று யாழ்ப்பாண மாநகரில் மணிவண்ணன் தலைமையிலான அந்த அமைப்பிற்கு தயவு கொடுத்துக்கொண்டிருப்பது இந்த ஈழமக்கள் ஜனநாயக அமைப்பு.

இவர்கள் அரச வேடதாரிகள்.இவர்கள் தங்களுடைய பதவிக்காக தாங்களும் தமிழ் தேசிய வாதிகள் என காட்டிக்கொன்டு தமிழ் தேச விரோத செயற்பாடுகளை மாநகர ஆட்சியினை வைத்துக்கொண்டு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *