இலங்கையில் கையிருப்பில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான பீசீஆர் மற்றும் என்டிஜன் கருவிகள் காரணமாக மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளைக் கண்டறிய தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மாத்திரமே சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் பரிசோதனைகளை நடத்துவது மிகவும் முக்கியமானதாக கருதப்படும் சூழ்நிலைகளுக்கு மாத்திரம் பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் குறைந்த வளங்களே உள்ளன. எனவே மீண்டும் மக்களிடையே வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் ஒரு நாளில் கிட்டத்தட்ட 25000 சோதனைகளை நடத்திய காலம் இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அத்தகைய சோதனைகளை நாடு மேற்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பரிசோதனைக் கருவிகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துவதன் மூலம் சுகாதார ஆய்வாளர்கள் நோயாளிகளைக் கண்டறிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாடு மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே வைரஸைக் கட்டுப்படுத்த நமது அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மக்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிற செய்திகள்