மின் பாவனை வீதம் குறைவு

கொழும்பு, ஓக 20

நாட்டில் மின்சார பாவனையானது 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைவடைந்திருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

மின் பாவனை அதிகம் தேவையுள்ள காலப்பகுதியில் மின் பாவனை குறைந்துள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை அமைக்க அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இத் திட்டத்திற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *