
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோய் பரவும் வீதமானது மிகவும் அதிகமானதாகக் காணப்படுகின்றதென குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், டெங்கு நோய் பரவும் விதமும் அதனால் ஏற்படுகின்ற இறப்பும் அண்மைய நாட்களில் மிகவும் அதிகமாயே காணப்படுகின்றது. ஆகையினால் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு, டெங்கு நோய் பரவும் இடங்களைத் துப்புரவு செய்ய வேண்டும். மற்றும் விழிப்புணர்வோடு இருப்பதும் அவசியமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.