மீண்டும் தொடங்கும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள்

<!–

மீண்டும் தொடங்கும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் – Athavan News

சுமார் 2 மாதங்களின் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நேற்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு லட்சம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய இரண்டாவது கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த மசகு எண்ணெய்யின் ஊடாக எதிர்வரும் 40 நாட்களுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இயக்க முடியும் என்பதோடு விமானங்களுக்கான எரிபொருள் நேற்றிரவு முதல் தரையிறக்கப்பட்டாதாகவும் வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *