இலங்கை வரும் கோட்டா? மிரிஹான வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு !

மிரிஹான பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக இல்லம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவரது இல்லம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் அவரது வருகை அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர் அரசியல் மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி அவர் நாட்டுக்கு வருகைதரும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *