அல்-ஷபாப் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக சோமாலியப் படைகள் அறிவிப்பு

சோமாலிய தலைநகரில் உள்ள ஹோட்டலில் அல்-ஷபாப் ஆயுததாரிகள் நடத்திய கொடிய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக சோமாலியப் படையினர் அறிவித்துள்ளனர்.

சுமார் 30 மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹோட்டலைத் தாக்கி, இரண்டாவது இரவுவாகவும் அங்கே பதுங்கியிருந்த தாக்குதல்காரர்களை அகற்ற பாதுகாப்புப் படையினர் கனரக ஆயுதங்களுடன் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இருப்பினும் எத்தனை பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் அல்லது எத்தனை அல்-ஷபாப் போராளிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து அதிகாரிகள் அறிவிக்கவில்லை.

மேலும் கட்டிடத்தில் வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் அதனை அகற்றும் பணிகள் இடம்பெறுவதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

இதேவேளை அல்-ஷபாப் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியபோது அந்த ஹோட்டலில் சிக்கியிருந்த பலரை மீட்டுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *