161க்குள் சுருண்டது சிம்பாவே: 5 விக்கெட்களால் இந்திய அணி வெற்றி!

சிம்பாவே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் கே.எல்.ராகுல் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய சிம்பாவே அணி 38.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இதன்மூலம் ஒருபோட்டி மீதமிருக்க மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *