பெருந்தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புக்களை இல்லாது செய்வதற்கு நிதி ஒதுக்கீடு!

<!–

பெருந்தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புக்களை இல்லாது செய்வதற்கு நிதி ஒதுக்கீடு! – Athavan News

பெருந்தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புக்களை இல்லாது செய்வதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து, உரையாற்றும்போதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய லயன் குடியிருப்புக்களை 3 வருடங்களில் இல்லாது செய்யும் நோக்குடன், லயன் வீடுகளை அபிவிருத்தி செய்வதற்காக தோட்ட வீடமைப்பு அபிவிருத்திக்கு 2022ம் ஆண்டுக்காக 500 மில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *