
நாட்டின் 8 மாவட்டங்களில் உள்ள அனைத்து தரிசு வயல்களிலும் பெரும் போகத்தில் பயிரிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தரிசு நிலங்கள் அனைத்திலும் பயிரிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது சுமார் 100,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படாத தரிசு நெல் வயல் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் அமைந்துள்ளன.
நாட்டில் சுமார் 50,000 ஏக்கர் தரிசு வயல்களில் பயிர் செய்ய முடியும் மற்றும் மீதமுள்ள தரிசு வயல்களில் பயிர் செய்கை செய்ய முடியாத நிலையில் உள்ளது.
எனவே, விவசாயம் செய்யப்படாத வயல் நிலங்களை உரிமையாளர்கள் 5 வருட காலத்திற்கு ஒதுக்கி மீண்டும் நடவு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தரிசு நிலங்களை மீள் நடவு செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை விவசாய அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பித்துள்ளது. விவசாய அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் பயிரிடப்படாத நெற்பயிர்களை ஐந்தாண்டுகளுக்கு பயிர்ச் செய்கைக்காக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த வாரம் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில், அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, அம்பாறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தரிசு வயல்களில் முழுமையாக பயிர் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்தது.
இந்த 08 மாவட்டங்களில் 21,200 ஏக்கர் தரிசு வயல் நிலங்கள் இருந்ததோடு, அடுத்த போகத்தில் அவை அனைத்தையும் சாகுபடி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்தோனேசிய சொஜன் பயிர்ச்செய்கையை பயன்படுத்தி மேல்மாகாணத்தில் பயிர் செய்ய முடியாத தரிசு வயல்களை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் அமைச்சர் ஆலோசனை வழங்கியதுடன், சோஜன் முறையின் கீழ் மரக்கறி மற்றும் பழச் செய்கைகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவும், பயிர் செய்யக்கூடிய ஒவ்வொரு தரிசு வயல்களையும் மீள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் உள்ள அனைத்து தரிசு வயல்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்