காலி கோட்டைக்கு வரும் உல்லாசப்பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கைக்கு வரும் டொலர்கள் நஷ்டம் காலி கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் மின்வெட்டு காரணமாக பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக காலி கோட்டை பகுதியில் மின்வெட்டு இல்லாத நிலையில், சமீபகாலமாக காலி கோட்டையில் உள்ள வணிக ஸ்தலங்களில் இருமுறை சில மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

நாட்டிற்கு டொலர்களை வழங்கக்கூடிய காலி கோட்டைக்குள் உள்ள வர்த்தக ஸ்தலங்களில் இருந்து இரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *