புத்தளம் கொட்டுக்கச்சி தங்கஸ்வெவ பகுதியில் விகாரையொன்றில் அரியவகை உயிரினமான தேவாங்கு குட்டியொன்று உயிருடன் மீட்டு புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் அலுவலகத்தில் விகாராதிபதியினால் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த உயிரினமான தேவாங்கு நிகாவெரெட்டிய கால்நடை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ் உயிரினம் அடர்ந்த காடுகளிலே வாழ்ந்து வருவதாகவும் குறித்த உயிரினத்தை மக்களுக்கு எழிதில் காணக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லையெனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரினமான தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அழிவடைந்து வருகின்றதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேவாங்கின் உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் மருத்துவக் குணமுடையது என உள்நாட்டு மக்களால் நம்பப்படுகின்றதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.
பிற செய்திகள்