மகிந்த ராஜபக்ச சென்ற பாதையிலேயே கோட்டாபய ராஜபக்ச செல்கிறார். முதலாவது வருடத்திலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பை பகைத்துக்கொண்டார் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் சர்வதேசத்துடன் இணைந்து பணியாற்றும் கட்சிகள். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து ஆடை ஏற்றுமதிக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக்கொண்டோம்.
எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பை பகைத்துக் கொண்டது. எமது அரசாங்கமாக இருந்தால், கடனை இலகு தவணையில் செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக் கொண்டிருப்போம்.
இருப்பினும், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பற்றி மீள் பரிசீலனை செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.
இந்நிலையில், அடுத்த மாதம் என்ன நடக்குமோ என்பது தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு மூடல்!