நேற்று மேலும் 21 பேர் கொரோனாவால் பலி!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,016 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 382 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 524,311 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 512 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 552,054 ஆக அதிகரித்துள்ளது.

எரிவாயு சிலிண்டரை தரக்கோரி பெண்ணொருவர் வீதியின் குறுக்கே அமர்ந்து ஆர்ப்பாட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *