வாழைச்சேனை, மக்களடி வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து ஐவர் அடங்கிய போதைப்பொருள் வியாபார கும்பல் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
33, 37, 38, 42, 44 வயதுடைய ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து, 21 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதையொழிப்பு விசேட பிரிவினரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, குறித்த போதைப்பொருள் வியாபாரக் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
ஐவரில் நால்வர் வாழைச்சேனைப் பிரதேசத்தவர்களும் இவர்களுக்கு கொழும்பிலிருந்து போதைப்பொருள் விநியோகிக்கும் ஒருவரும் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.