வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இளைஞன் விபத்தில் பலி!

காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் நேற்றுஇடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

வண்டு வீதி உடங்கா 02 சம்மாந்துறையைச் சேர்ந்த 31 வயதுடைய அஸ்ரப் முஹம்மது முனாஸ் என்பவரே விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

வெளிநாடொன்றில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பியிருந்த இவரின் மரணம் சம்மாந்துறை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வாகனத்தை செலுத்தியவர்களின் கவனயீனமே விபத்திற்கு காரணமென சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தாலும் அரசாங்கத்தை மாற்ற முடியாது! சன்ன ஜயசுமன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *