பௌத்த அறநெறி பாடசாலைகளை திறக்க ஆலோசனை!

அனைத்து பௌத்த அறநெறி பாடசாலைகளும் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும், தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹாட்லியின் மைந்தர்கள் நினைவாக குருதிக்கொடை முகாமில் பங்கேற்க அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *