கொரோனா தடுப்பூசியை முறையாக பெற்று கொள்ளுங்கள்! சுகாதார பிரிவினர் அறிவுறுத்து

வவுனியாவில் கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதனால் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்று கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தொற்றும் நாட்டில் அதிகரித்து வருகிறது. கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், பலர் கொவிட் தொற்றுக்குளாகியும் உள்ளனர்.

இதன் காரணமாக கொவிட் தொற்று தீவிர நிலையை அடையாது தடுக்கும் நடவடிக்கையாக பைசர் கொவிட் தடுப்பூசிகள் மீள ஏற்றப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 3வது கொவிட் தடுப்பூசியினை 43 வீதமானவர்களும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 வீதமானவர்களும், வவுனியா வடக்கில் 35 வீதமானவர்களுமே தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். அத்தோடு 4வது தடுப்பூசி (பைசர்) வெளிநாடு செல்பவர்கள் மாத்திரமே குறைந்தளவில் செலுத்தியுள்ளனர்.

இதுவரை தடுப்பூசிகளை முறையாக பெறாதவர்கள் (1,2,3,4) தடுப்பூசிகளை பெற்று கொள்வதோடு, சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *