வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வீதியுலா வந்தனர். புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த மாம்பழத் திருவிழா இடம்பெற்று வருகிறது.
சிறப்பாக, சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கி முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என்ற புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மட்டுபடுத்தப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், இம்முறை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து உள்நாட்டு மற்றும் புலம் பெயர் தேசங்களில் இருந்தும் நம்மவர்கள் நல்லூர் கந்தன் மகோற்சப பெருவிழாவினை காண திரண்டு வந்துள்ளனர்.



பிற செய்திகள்