அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வின் மூலமாக மக்களுக்கு ஒரு தெளிவுப்படுத்தலை ஏற்படுத்துவது என்பது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் அதனை உறுதிப்படுத்துக்கொள்வதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களிலே ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று நோயில் ஊடகங்களின் செல்வாக்கு மிக காத்திரமான பங்களிப்பினை செய்திருந்தது.
மனப்பாங்கில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும். யாழ்ப்பாண மாவட்ட அபிருத்தியிலே ,அதன் வளர்ச்சியிலே மிகத் துல்லியமான ஊடகவியலாளர்கள் செயற்படுவதை கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றோம். யாழ் .மாவட்டத்தின் வளர்ச்சியிலே உங்களின் பணி என்றும் துணையாக இருக்கிறது.
அனர்த்தம் ஒன்று ஏற்படுவதற்கு முன்னர் ,பொதுமக்களுக்கு அதனை சரியான முறையில் தெளிவுபடுத்தல் ,பாதுகாப்பு நடவடிக்கைளை வெளிப்படுத்துவது என்பன கடப்பாடாக இருக்கின்றது.
எத்தகைய அனர்த்தங்கள் ஏற்படுகின்ற பொழுதும் அதற்குரிய முன்னாயத்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த எவ்வாறான செயற்பாடுகளை உங்கள் அறிவின் மூலம் மேற்கொள்ளலாம் என இந்த செயர்த்திட்டத்தினை நடாத்தியிருக்கிறோம் என்றார்.
பிற செய்திகள்