தமிழ் நாட்டு அரசினால் மனிதாபிமான மூன்றாம் கட்ட உதவி வழங்கல்!

இந்திய தமிழ் நாட்டு அரசினால் வழங்கப்பட்ட மனிதாபிமான மூன்றாம் கட்ட உதவி தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலும் வழங்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்று (23) வழங்கப்பட்டன.

இதில் அரிசிப் பொதி என்பன விசேட தேவையுடோர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளோருக்கும் சிறுநீரக நோய் ,இருதய நோய் கொடுப்பனவு மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் உள்ளடங்களாக நிவாரணப் பணி இடம் பெற்றன.
பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இவ் மனிதாபிமான உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதில் சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *