கண்டி மாவட்டத்தில் அதிகூடிய நோயாளர்கள் பதிவு!

நாடளாவிய ரீதியில் இதுவரை அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள கொழும்பு மாவட்டத்தை விட கண்டி மாவட்டம் அதிகூடிய டெங்கு நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாக மாறியுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,இம்மாதம் முதல் 22 நாட்களில் கண்டி மாவட்டத்தில் 521 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டங்களில் 475 பேர் பதிவாகியுள்ளனர். இந்த மாதத்தில் இதுவரை 2983 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது

குறிப்பாக,டெங்கு கொசுக்களின் அடர்த்தி பிரிட்டோ குறியீட்டில் 5ஐ தாண்டி 15ஐ எட்டியுள்ளது என்றும், ஆங்காங்கே பெய்து வரும் மழையால் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்காவிட்டால் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *