பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து தாக்கி காயப்படுத்தியதுடன் , அவரது பணப்பையை திருடியது மட்டுமல்லாது உறுப்பினரை பெரே வாவியில் தள்ளியதாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்,சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (22) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்தவின் வீடு மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அசம்பாவிதம் செய்த சந்தேகநபர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதானவர் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்