கர்ப்பிணி உள்ளிட்ட பெண்கள் நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்!

தேயிலைப் பறித்துக்கொண்டிருந்த பெண்கள் நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம்,இன்று (23) பகல் இச்சம்பவம் இடம்பெற்றதுடன், இதில் கர்ப்பிணி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை – பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த 4 பெண்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை குறித்த கர்ப்பிணியை அதிகமான குளவிகள் கொட்டியுள்ளதால் அவர் பொகவந்தலாவை வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *