சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியில் போராட்டக்காரர்கள் கைதுகள் தொடரும் போது இலங்கை எவ்வாறு சர்வதேச ஆதரவைப் பெற முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
அநியாயமான கைது நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயகம் களங்கப்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் மன்னிக்காது.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், ஊடக சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிற செய்திகள்