
குளியாபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குளியாபிட்டிய வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள விடுதி ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு, அதன் முன்பாக காத்திருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளியாபிட்டிய தண்டகமுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் இளைஞன் என்றும் கொலைக்கான
காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்