கியூ.ஆர் திட்டம் தொடர்பில் வெளியானது புதிய அறிவிப்பு!

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளைப் பதிவுசெய்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப் பத்திரம்(கியூ.ஆர்) செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று காலை இணையவழி ஊடாக நடைபெற்ற தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை 6 மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் நேற்று இந்த விடயத்தினை அறிவித்திருந்தார்.

குறித்த பதிவில், நாடு முழுவதும் உள்ள 93 சதவீதமான எரிபொருள் நிலையங்கள் கியூ.ஆர் அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமையை செயல்படுத்தியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *