ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (23) முதல் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு 194 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், ஒரு கிலோ பருப்பு 25 ரூபா குறைக்கப்பட்டு 460 ரூபாவுக்கும், ஒரு கிலோ நெத்தலி 25 ரூபா குறைக்கப்பட்டு 1375 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 198 ரூபாவுக்கு விள்பனை செய்யப்படவுள்ளதோடு, சிவப்பு சீனியும் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 310 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *