எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

நாட்டிற்கு மேலும் 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று இறக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

• 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இறக்கம் செய்யப்படும்.

• 2வது தொகுதி மசகு எண்ணெய் சரக்கு இன்று வந்து சேரும்.

• ஓட்டோ டீசல் தொகுதி 25-26 ஆம் திகதிக்கு இடையில் வந்தடையும்.

• 92 ரக பெட்ரோல் 27-29 ஆம் திகதிக்கு இடையில் வந்தடையும்.

• மண்ணெண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *