நாட்டிற்கு மேலும் 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று இறக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
• 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இறக்கம் செய்யப்படும்.
• 2வது தொகுதி மசகு எண்ணெய் சரக்கு இன்று வந்து சேரும்.
• ஓட்டோ டீசல் தொகுதி 25-26 ஆம் திகதிக்கு இடையில் வந்தடையும்.
• 92 ரக பெட்ரோல் 27-29 ஆம் திகதிக்கு இடையில் வந்தடையும்.
• மண்ணெண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்