பராமரிப்பு பொருட்கள் இல்லை; தொடருந்து சேவை சிக்கலில்!

தொடருந்து இயந்திரம் மற்றும் தொடருந்து பெட்டிகளை பராமரிப்பதற்கான பொருட்கள் இல்லாமையால் தொடருந்து சேவையினை முன்னெடுத்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக தொடருந்து தொழிற்சங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

திருத்த நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்படும் உராய்வு எண்ணெய் இல்லாததன் காரணமாக 20 இயந்திரங்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பீ. விதானகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேவையான பகுதிகள் இல்லாமையால் இயந்திரங்களை திருத்தப்பட வேண்டிய காலப்பகுதியில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தண்டவாளம், உராய்வு கட்டை மற்றும் ஆணிகள் உள்ளிட்டவைகளுடன் தொடருந்து பாதைக்கு தேவையான கற்களின் தட்டுப்பாடு காரணமாக தொடருந்து பாதை பராமரிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பல முறைமைகள் ஊடாக சேவையாளர்கள் ஆட்சேர்கப்படாமை, தொடருந்து திணைக்களத்தில் பகுதியான பயிற்சி மற்றும் பயிற்றப்பட்ட சேவையாளர்களின் வெற்றிடங்கள் பல காணப்படுவதாக தொடருந்து தொழிற்சங்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *