
கொழும்பு, ஓக 24
ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் நளீன் குணவர்தன ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.