வடக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் காலை வேளைகளிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் பிரதீபன் தெரிவித்தார்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வவ்ப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளைகளில் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் காலை வேளைகளிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே பொது மக்கள் இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து ஏற்படும் இழப்புக்களை குறைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *