
கொழும்பு, ஓக 25
நாட்டில் சுற்றுலா துறை முன்னேற்றம் அடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் 30 ஆயிரத்தும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 775 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.