மே 9 விவகாரம் – ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

<!–

மே 9 விவகாரம் – ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு – Athavan News

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

மே 9ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் எரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்காச்சார்பற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *