புதிய இடத்திற்கு மாறும் அமெரிக்க தூதரகம்; தூதுவர் வெளியிட்டுள்ள தகவல்!

அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு இடம்பெயரவுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களையும் பதிவேற்றி அவர் இதனை கூறியுள்ளார்.

பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் புகைப்படங்களில் காணப்படுகிறது.

அமெரிக்க – இலங்கை இடையிலான வரலாற்று தொடர்பாகவும் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

“ பல தசாப்தங்கள் பழமையான எமது அலுவலகங்களில் இருந்தும், பல தசாப்தங்கள் பழமையான அமெரிக்க- இலங்கை வரலாறு பொதிந்த எமது புதிய தூதரக அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளோம்.

அதற்காக அனைவரும் கைகோர்த்துக்கொண்டோம். இது புதிய அனுபவமாக இருக்கும். விரைவில் எமது புதிய அலுவலத்திற்கு உங்களை வரவேற்க காத்திருக்கின்றோம்” என ஜூலி சுங் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *