கலஹா பெல்வுட் கொலனியில் வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிமையில் வசித்து வந்த நபர், நேற்று முன்தினம் இரவு சிலருடன் இணைந்து மதுபான விருந்து நடத்தியுள்ள நிலையில் இதன்போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
பிற செய்திகள்