
எந்தவொரு அனுமதி பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிகங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுப்பானம் எரிபொருள் வழங்காது என்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2,100 இற்கும் அதிகமான நிறுவனங்களிடம் அங்கீகாரமற்ற வகையில் எண்ணெய் தாங்கிகள் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு கண்டறிந்துள்ளது.
இதேவேளை, தற்போது 1,250க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஏற்றுமதி வணிகங்கள், தமது எரிபொருள் தேவைக்கான கட்டணத்தை அமெரிக்க டொலரில் செலுத்த வேண்டும்.
அத்துடன், குறித்த வணிகங்கள், நிரப்பு நிலையங்களுக்கான விநியோகஸ்த்தரர்களிடமிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், வணிகங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்படமாட்டாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்