
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் விசேட செயற்குழுக் கூட்டம் 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் அகிலஇலங்கை சைவப்புலவர் சங்க தலைவர் சைவப்புலவர் சி.கா.கமலநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நடைபெற்று முடிந்த இளஞ்சைவப்புலவர் ,சைவப்புலவர் பரீட்சை பெறுபேறு வெளியீடு செய்வது தொடர்பான முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதனால் அனைத்து நிர்வாக செயற்குழு உறுப்பினர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார் .
பிற செய்திகள்