
அரசாங்கம் பிரகடன படுத்தியுள்ள அவசர விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ்”நாம் ஒன்றுபடுவோம் நாட்டை மீட்டு எடுப்போம் ” எனும் தொனிப் பொருளில் திருகோணமலை – கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பாடசாலை தோட்ட அறுவடை விழா அதிபர் எஸ் . எம். அனிபா தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் ஹுசைன்டீன் , கிண்ணியா வலய கல்விப்பணிப்பாளர் ஏ. நசூகர்கான் , கிண்ணியா பிரதேச செயலாளர் எச். எம். கணி , நகர பிதா முஸ்தபா நிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் தற்போதைய பொருளாளர் நெருக்கடியை மாணவர் ஆசிரியர்களை கொண்டு தீர்க்கும் முகமாக பாடசாலையில் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில்கொண்டு கிண்ணியா வலயக்கல்வி அலுவலகம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் வெண்டி, கத்தரி, மிளகாய் போன்ற செடிகளை வளர்த்து இன்று அறுவடையை மேற்கொண்டுள்ளது.
பாடசாலை அதிபர் எஸ்.எம். அனிபா இன் வழிகாட்டலில் இன்று அறுவடை நடைபெற்று 60 ஆயிரம் ரூபாய்கு உற்பத்திகள் ஆசிரியர்களுக்கும், அதிதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
முற்றிலும் நஞ்சற்ற உணவாக இது காணப்படுகின்றன.
உற்பத்தி விளைச்சலுக்காக சேதன பசளை பாவிக்கப்பட்டுள்ளன.
இப்ப பயிர் செய்கை நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை சிற்றூழியர்கள் அனைவரும் ஒன்று இணைந்து பாடசாலை தோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
இதன் நோக்கம் மாணவர்களை ஆசிரியர்களை ஊழியர்களை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இவர்களின் பங்களிப்பையும் பாடசாலை ஊடாக சேர்த்துக் கொள்வதாகும்.
கிண்ணியா வலயத்தில் உள்ள 66 பாடசாலைகலிலும் திட்டத்தை அமுல்படுத்த இன்று அதீதி களினால் ஆலோசனை பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்