தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாருடைய 42வது வருட நினைவு தினம் வவுனியாவில் நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவுதினமானது இன்று (01.09) காலை 8.30 மணியளவில் நகரசபையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
இதன்போது தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தமிழ் அருவி சிவகுமாரனால் சிறப்புரையும் மேற்கொள்ளப்பட்டது.
நகரசபை உபதலைவர் ஆ.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், சுமந்திரன், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கெனடி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






பிற செய்திகள்
- அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த நடவடிக்கை! – அமைச்சர் தகவல்
- விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எண்ணெய் தாங்கி மீட்பு
- மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- இலங்கை மக்களை காப்பாற்றுங்கள்! – ஐ.நாவிடம் சோபித தேரர் அவசர கோரிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka