எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்தித்த சமந்தா!

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் ஆட்சி செய்வதற்கும் தயாராக உள்ளதாக ,சமந்தா பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *