இலங்கை கிரிக்கெட் – வலைப்பந்தாட்ட அணிகள் வாகன பேரணியில் கொழும்புக்கு!

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், ஆசிய செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் தீவுத்திடலுக்கு வந்துள்ளன.

ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் 6ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று அதிகாலை 12.50 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

வலைப்பந்தாட்ட அணியை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் திரு.ரோஹன திஸாநாயக்க வரவேற்றார்.

இதேவேளை, 6வது தடவையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை 05 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

அவர்களை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீவுக்கு வந்துள்ள விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

இன்று காலை 06.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வாகன பேரணி பேலியகொட சந்தி, மருதானை சந்தி, டாலி வீதி, யூனியன் பிளேஸ், கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் அலெக்ஸாண்ட்ரா வீதி ஊடாக சுதந்திர மாவத்தையை சென்றடைவதுடன், அந்த இடங்களில் விசேட வரவேற்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த அனைத்து மக்களும் தங்கள் கைகளில் தேசியக் கொடிகளுடன் பாதையின் இருபுறமும் ஒன்று சேர அழைக்கப்படுகிறார்கள்.

இந்த வாகன அணிவகுப்பு கட்டுநாயக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் வலைப்பந்து சம்மேளன தலைமையகத்தை வந்தடைய உள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *